சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய அமர்வில் பல்வேறு முக்கிய அலுவல்கள் இடம்பெறவுள்ள நிலையில், காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையான ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் இடம்பெறவுள்ளன.
இதன் பின்னர், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2482/03 மற்றும் 2482/04 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் உள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)