IMF-இன் 5 மற்றும் 6 ஆம் தவணை நிதி இலங்கைக்கு விடுவிப்பு.

 


சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ள 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிதியுதவி, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிக்கவும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் இந்த நிதி ஆதரவாக அமையும் என பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.