பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – இன்றைய நடவடிக்கை அட்டவணை அறிவிப்பு.

 


சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இன்றைய அமர்வில் பல முக்கிய சட்டமூலங்கள் மற்றும் கேள்வி நேரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

மு.ப. 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப. 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், மு.ப. 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் வழங்கப்பட்டுள்ளது.

மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு உள்ளிட்ட பல முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதில் சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் இறக்குமதி–ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான விதிமுறைகள் பற்றிய விவாதங்களும் அடங்குகின்றன.

பின்னர் பி.ப. 5.00 மணிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட “நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம்” தொடர்பான இரண்டாவது மதிப்பீடு, சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.