முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளை பேணியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
