ஈரான் ஆதரவு பெற்றுள்ள இந்த அமைப்பின் தலைவர் Naim Qassem வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த பேச்சுவார்த்தைகள் லெபனானுக்கு எந்த பயனும் அளிக்காத “வீணான” மற்றும் “அவமானகரமான” முயற்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் லெபனான் மக்களின் பரந்த தரப்பினரால் ஏற்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானுக்குள் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை அமைக்கும் வகையில், Israel மற்றும் Lebanon ஆகிய நாடுகள் தங்களின் பலவீனமான போர்நிறுத்த உடன்பாட்டை புதுப்பித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், புதிய உடன்பாடு ஹிஸ்புல்லா அமைப்பின் முழுமையான துப்பாக்கிச் சூடு நிறுத்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நயீம் காசிம், லெபனானில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதை எவ்வாறு போர்நிறுத்தம் என்று அழைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
“இது அமைதி ஒப்பந்தம் அல்ல. மாறாக, சரணடைதலைக் குறிக்கும் ஒரு ஒப்பந்தமாகவே தெரிகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 35 ஆண்டுகளாக குடும்ப வணிகத்தை நடத்தி வரும் ஹாதி என்ற லெபனான் குடிமகன், புதிய ஒப்பந்தம் குறித்து தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், தற்போதைய சூழ்நிலை புதிதான ஒன்றல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
.jpeg)