தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவகப் பகுதியில் திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து அங்கிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
முதற்கட்ட தகவலின்படி, குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், சம்பவத்தின் துல்லியமான காரணத்தைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.