மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர்.

 


13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சநீதிமன்ற சட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அது முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதேவேளை, அதனை பாதிக்கும் வகையில் சமகால பட்டியலில் உள்ள சுற்றாடல் துறையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களில் தலையீடு செய்வது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வாக மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “13+ அல்லது 13- அல்லாமல், 13ஆவது அரசியலமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டில் இருந்து மாகாண சபைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.