19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான குறித்த பொலிஸ் அதிகாரி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
