இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு – 4 மாவட்டங்கள் பாதிப்பு.



 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) வெளியிடப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (27) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்ட அபாய எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேசங்கள் அடங்குகின்றன:

களுத்துறை மாவட்டம் – மத்துகம, புலத்சிங்கள
கேகாலை மாவட்டம் – தெரணியகல, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, ருவான்வெல்ல, புலத்கொஹுபிட்டிய
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம் – எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல, கிரியெல்ல, கலவான

அதிக மழை நிலவும் பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடியதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.