ஆன்லைன் மோசடி: 147 வெளிநாட்டினர் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஆன்லைன் மோசடி: 147 வெளிநாட்டினர் கைது




இணையத்தின் மூலம் நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 147 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் தங்கியிருந்து இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர். அதன்படி, சீனாவைச் சேர்ந்த 133 பேர், வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.