சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இன்று (15) முதல் விசேட பஸ் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் கொழும்பு நோக்கி அதிகமான பயணிகள் திரும்புவதை முன்னிட்டு இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
