இன்று நாடளாவிய வைத்தியர்கள் வேலைநிறுத்தம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இன்று நாடளாவிய வைத்தியர்கள் வேலைநிறுத்தம்




அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), வைத்தியர்களின் இடமாற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

இன்று (31) காலை 8.00 மணி முதல் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாகும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

எனினும், சில முக்கிய மருத்துவ நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் அமல்படுத்தப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்:

  • மகப்பேறு வைத்தியசாலைகள்
  • சிறுவர் வைத்தியசாலைகள்
  • மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை
  • விசேட சிறுநீரக சிகிச்சைப் பிரிவுகள்
  • முப்படை வைத்தியசாலைகள்
  • தேசிய மனநல நிறுவனம்

இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடில், எதிர்காலத்தில் மேலும் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஹன்சக்க விஜேமுனி இந்த வேலைநிறுத்தம் குறித்து கருத்து வெளியிடுகையில், வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வழக்கமானது அல்ல என்றும், அவ்வாறான நடவடிக்கைகள் பெரிதாக இடம்பெற வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், வைத்தியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனமாக அணுகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.