ஐரோப்பிய ஒன்றியம் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு, ஏமன் கடல் எல்லைக்குள் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக இந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது.
ஹவுதி இயக்கம் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் Bab al-Mandeb நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதை பாதிக்கப்படுமானால், சர்வதேச விநியோகச் சங்கிலி பெரிதும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் Aspides Naval Mission வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்கள் தற்போதைக்கு அந்தப் பகுதியைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் நிலை வகைப்படுத்தலின்படி, இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு “உயர் அபாயம்” என்றும், பிற கப்பல்களுக்கு “மிதமான அபாயம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏமனின் வடமேற்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி இயக்கம் கடல் வழிப் போக்குவரத்தை இலக்காகக் கொண்டால், உலகளாவிய பொருளாதாரத்துக்கும் விநியோகச் சங்கிலிக்கும் கடுமையான தாக்கம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.