கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
