முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது...

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.



முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டுள்ள நிதி

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் 89 இலட்சத்து 375 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.