ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறையில் நடந்த விபரீதம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறையில் நடந்த விபரீதம்

களுத்துறை - நாகொடை சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சேவை புரியும் 20 வயதுடைய முகாமையாளர், கடந்த 28 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கியுள்ளமை தொடர்பில் கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமையவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் ஒருவரால் கர்ப்பமான 15 வயதுடைய மாணவியால், காவற்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுள்ளனர்.

About UK TAMIL NEWS