மீட்டியாகொட பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணையில் புதிய திருப்பம்.

 


தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைத்துப்பாக்கி ஒன்றும் மற்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றவியல் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (22) நண்பகல் மீட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 9 மில்லிமீட்டர் வகையைச் சேர்ந்த 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த சந்தேகநபர், கடந்த ஜூன் 19ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இந்த ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றவியல் பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.