மாத்தளை, வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் இழுக்கப்பட்டிருந்த கேபிளில் மோட்டார் சைக்கிள் சிக்கியதாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அவருடன் பயணித்த 14 வயதுடைய இரு பிள்ளைகள் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீரிகம–நால்ல வீதியின் ஹ்குருக்கும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்ல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பாதசாரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பாதசாரி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தெல்விட்ட–கிரிபத்கல்ல வீதியின் கொடமட பகுதியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
