தற்போது நிலவும் பலத்த மழை காரணமாகவே இந்த போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையால் வாகன ஓட்டம் மெதுவாகியதால், வெளியேறும் பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் தேங்கி நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நிலையை விரைவாக சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று (22) காலை பெய்த மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பல முக்கிய வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக 'அத தெரண' செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
