உகாண்டா பெண் பெங்களூரில் தனிமைப்படுத்தல்: எபோலா சந்தேகம் – பரபரப்பு.



எபோலா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் இந்தியாவின் பெங்களூரு நகரில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தெற்காசியாவில் பதிவாகும் முதல் எபோலா நோயாளி இவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள இந்த நோய், இதுவரை இந்தியாவில் உறுதி செய்யப்படவில்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேக அறிகுறிகளின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத்திலிருந்து பெங்களூரு நகரத்திற்கு பயணம் செய்த இந்த பெண், தற்போது லேசான உடல் வலி தவிர மற்றபடி நிலையான உடல்நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, விமான நிலையங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளான கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியா முன்பே அறிவுறுத்தியுள்ளது.

பொது சுகாதார பாதுகாப்பு காரணமாக இந்தியா–ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.