Donald Trump, Iran உடன் "உண்மையான உடன்படிக்கை" ஒன்று எட்டப்பட்டு அது முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தனது Truth Social சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள எதிரியை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான அமெரிக்க இராணுவ வலிமைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மட்டுமன்றி, கூடுதல் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பிற முக்கிய இராணுவ உபகரணங்களும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என கூறிய Donald Trump, ஒருவேளை அவை மீறப்பட்டால் இதுவரை உலகம் கண்டிராத மிகப்பெரிய மற்றும் வலிமையான தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், Iran எந்தவொரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதிலும், Strait of Hormuz நீரிணை எப்போதும் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் நீண்ட காலத்திற்கு முன்பே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்ற சூழ்நிலையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
