மொரவெவ, யாய 06 பகுதியில் பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மின்சாரக் கம்பிகளை உயிரிழந்த நபரே தனது பயிர் நிலத்தை பாதுகாப்பதற்காக அமைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கவனம்: சட்டவிரோத மின்சாரக் கம்பிகளை அமைப்பது உயிருக்கு ஆபத்தானதுடன் சட்டவிரோதமான செயலாகும் என்பதால், பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
