ட்ரம்புக்கு கடும் எச்சரிக்கை: பதற்றம் அதிகரித்தால் ஈரான் தாக்கும்!

 


ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதற்றம் மேலும் அதிகரிக்க முயன்றால், அதற்கு எதிராக செயல்பட ஈரானின் ஆயுதப்படைகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் முயற்சிக்கு தயாராக இருந்த நிலையில், ஈரானின் திறன்களை தவறாக புரிந்துகொண்ட ட்ரம்பின் நடவடிக்கையால் அந்த முயற்சி உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டதாக அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், “ஒரு வாரமாக நீடித்த ட்ரம்பின் தவறான நடவடிக்கைகள் ஏற்கனவே அமெரிக்க இராணுவத்திற்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது. இதற்கு மேலாக இளம் படைவீரர்களின் உயிர்களும் இழந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், அந்த செலவின் பாரம் இறுதியில் சாதாரண அமெரிக்க மக்கள் மீதே விழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது போர்களை நடத்த அமெரிக்காவை ஏமாற்றி இழுத்துள்ளதாகவும், இது “தேர்ந்தெடுக்கப்பட்ட போர்” எனவும், “இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள்” முன்னெடுத்த போர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.