தமது அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக நிதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ள பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏவுகணை, இஸ்ரேலிய அணுசக்தி மையத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் விழுந்து வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தெற்கு இஸ்ரேலின் எராட் (Arad) நகர் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
முகப்பு / உடன் செய்தி /
உலகச் செய்திகள் /
தலைப்புச்செய்திகள்
/ ஈரான் ஏவுகணை தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்
