இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளில் வாழும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, லெபனானின் "மூலோபாயப் பகுதிகளை" இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கை லெபனானின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இது பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா (Hezbollah) ஆயுதக் குழுவிற்கும் இடையே ஒரு வருடமாக நீடித்த முழு அளவிலான போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
