ஈரானில் இருந்து மேலும் ஏவுகணைகள் ஏவப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலைத் தடுக்க" செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குள் நுழைந்து புதிய அறிவிப்பு வெளியாகும் வரை அந்த இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
"பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறுவது வெளிப்படையான உத்தரவைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும்;.உள்நாட்டு கட்டளை உத்தரவுகளின்படி தொடர்ந்து செயல்படுங்கள்" என்றும் மேலும் கூறியுள்ளது.
