துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சூட்டுச் சம்பவத்தில் தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்ததே காயமடைந்தவராவார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.