இந்த சவாலான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கமும் எ...
விளம்பரம்
The Most/Recent Articles
முகப்பு / திரைச் செய்திகள்
/ நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மாலையில் நடக்கிறது: திரையுலகமே திரண்டு பங்கேற்கிறது
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மாலையில் நடக்கிறது: திரையுலகமே திரண்டு பங்கேற்கிறது
நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் இன்று நண்பகலுக்கு மேல் நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் ரஜினி உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் கலந்துகொள்கின்றனர். நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருந்து மும்பை கொண்டுவரப்பட்டதும், மும்பையின் ஜூஹூ என்ற இடத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. முன்னதாக மும்பை அந்தேரி மேற்கு ஜே.பி. சாலையில் உள்ள வாக்கியா பங்களா வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. இறுதி நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகினர் கலந்துகொள்கின்றனர். நடிகர் ரஜினி நேற்றிரவே மும்பை சென்றுவிட்டார். நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் உள்ள நடிகை ஸ்ரீதேவியின் இல்லம் முன்பு நேற்றிரவில் இருந்தே அவரது ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்கள்.. குளியறையில் நடிகை ஸ்ரீதேவி 15 நிமிடங்கள் வரை சுய நினைவு இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. துபாயி்ல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி, நிகழ்ச்சி முடிந்து ஜூமைரா என்ற ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். அவருடன் சென்ற கணவர் போனி கபூர் மற்றும் உறவினர்கள் மும்பை திரும்பிவட்டனர். ஹோட்டலில் தனியாக தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு ஆனந்த அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருடைய கணவர் போனி கபூர் சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்றுள்ளார்.
இரவு உணவுக்கு செல்ல தயாராகுமாறு கணவர் கேட்டுக்கொண்டதை அடுத்து முகம் கழுவ சென்ற ஸ்ரீதேவி, 15 நிமிடங்கள் கடந்தும் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து கணவர் போனி கபூரும் அவருடைய நண்பர்களும் கதவை உடைத்து பார்த்தபோது ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவர்கள் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். ஆனால் பிரேத பரிசோதனைக்கான அறிக்கை கிடைத்த பின்னரே அவரது இறப்புக்கான காரணம் குறித்த முழு தகவல்கள் தெரியவரும்.