குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ரஷ்ய வீரரின் பதக்கம் பறிப்பு!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ரஷ்ய வீரரின் பதக்கம் பறிப்பு!!!

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்திய அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கியின் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் தனது மனைவி அனஸ்டசியாவுடன் இணைந்து கர்லிங் கலப்பு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
 இந்நிலையில் அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரின் பதக்கத்தை ஒலிம்பிக் குழு பறித்துள்ளது

About Unknown