இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சபரிமலை வனப்பகுதியில் காசு வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கூடலூர் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.இவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 4 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.