வவுனியாவில் இன்றிரவு நடந்த கொடூரம்; ஒருவர் வைத்தியசாலையில்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வவுனியாவில் இன்றிரவு நடந்த கொடூரம்; ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் இன்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
வவுனியா மாவட்டம் சமனங்குளம் என்ற இடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய சுப்பிரமணியம் சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையில் முன் விரோதம் இருந்துள்ள நிலையில் முன்னரும் ஒருதடவை வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த விரோதம் தொடர்ந்துள்ள நிலையில் இன்றைய தினம் மீண்டும் இவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்ட நிலையில், மீண்டும் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

About UK TAMIL NEWS