வேறு ஆணுடன் தனிமையில் இருந்த மனைவி: கணவன் செய்த செயல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வேறு ஆணுடன் தனிமையில் இருந்த மனைவி: கணவன் செய்த செயல்

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் இருவரையும் அரிவாளால் வெட்டியதையடுத்து பொலிசார் கணவரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் விஜய் (28), லொறிகளை பழுது பாக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
இவரின் மனைவி ஐஸ்வர்யா(25), இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதையடுத்து, சில நாட்களாக விஜய் மனைவியை விட்டு பிரிந்து பெரம்பூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார்.
ஐஸ்வர்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அருண் (20) என்ற இளைஞருடன் ஐஸ்வர்யாவுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த விஜய் கண்டித்து வந்தார். இதனிடையில் நேற்று முன்தினம் மாலை அருணின் பைக் ஐஸ்வர்யா வீட்டில் நிற்பதை பார்த்த விஜய் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், தனது நண்பர் வினோத்குமார் என்பவரை அங்கு அழைத்து அரிவாளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த ஐஸ்வர்யாவையும், தப்பி ஓட முயன்ற அருணையும் விஜய் அரிவாளால் வெட்டினார்.
இதுகுறித்து பின்னர் விஜய் பொலிசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு விஜய்யை கைது செய்த பொலிசார் தலைமறைவாக உள்ள வினோத்குமாரை தேடி வருகிறார்கள்.

About UK TAMIL NEWS