பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் ஒருவர் பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் ஒருவர் பலி

மீகலேவ, லஸ்ஸனகம பிரசேத்தில் ஆயுதத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளைக்காரர்கள் இருவரின் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளைக்காரர்களினால் பிரதேச விகாரையில் உள்ள புத்தர் சிலை மற்றும் இரத்தின கற்கள் கொல்லையடிக்க செல்லும் போது பொலிஸாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலின் போது இவ்வாறு ஒரு சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸாரினால் குறித்த மோட்டார் சைக்கிள் இடைநிறுத்தப்பட்ட சோதனையிட்ட போது, சந்தேக நபர்களினால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு உடனடியாக செயற்பட்ட பொலிஸாரினால் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.
மற்றைய சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபர்களிடம் இருந்து டீ 56 ரக துப்பாக்கி, பிரவுனின் ரக துப்பாக்கி மற்றும் கை குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About UK TAMIL NEWS