Kaakee Circus சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. Ameen இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரிஸில் Subash Selvam மற்றும் Munishkanth ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், ZEE5 தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள Kaushik பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் OTT திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்கக் கூடாது என்று கூறப்பட்டதாக எழுந்த கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பே கையெழுத்திட்ட திரைப்பட ஒப்பந்தங்களை முதலில் முடிக்க வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், OTT-யில் நடிக்கவே கூடாது என்று எந்தத் தடைவும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஒரு நடிகர் எந்த தளத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரவரது உரிமை என்றும், அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், சினிமா, சீரியல் அல்லது OTT என கலைஞர்களை பிரித்து பார்க்க முடியாது; கலைக்கு எல்லைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
OTT தளங்களில் நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை அவர் மறுத்தார். அனைத்து நடிகர்களுக்கும் அனைத்து திரைப்படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உறுதியல்ல; பலர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் சூழலில் OTT தளங்கள் அவர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நல்ல தரமான உள்ளடக்கங்கள் OTT தளங்களில் வெளியாகி வருவதாகவும் அவர் கூறினார்.
திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே OTT-யில் வெளியிட வேண்டும் என்ற கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, Jananayagan திரைப்படம் தொடர்பான வெளியீட்டு திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையில் OTT வெளியீட்டு காலம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். சில நேரங்களில் தயாரிப்பாளர்களின் முடிவுகள் அல்லது விழா காலங்களை கருத்தில் கொண்டு வெளியீட்டு தேதிகள் மாற்றப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, Vijay தமிழ் புத்தாண்டை முன்னிட்டு Zee Tamil தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி வழங்கியதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அதுபோன்ற பேட்டி நடைபெற்றதாக தமக்குத் தகவல் இல்லை என்றும், புத்தாண்டு நாளில் அது வெளிவந்தால் மட்டுமே உறுதியாக கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
