அமெரிக்க அரசியலில் பரபரப்பு: ட்ரம்ப் குழுவில் இருந்து அதிகாரிகள் விலகல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அமெரிக்க அரசியலில் பரபரப்பு: ட்ரம்ப் குழுவில் இருந்து அதிகாரிகள் விலகல்




ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள பல உயர் அதிகாரிகள் பதவி விலகலை அறிவித்த வண்ணம் உள்ளனர்.இந்தப் பதவி விலகல் என்பது அமெரிக்காவைப் பொறுத்த வரையில் தாங்கிக் கொள்ள முடியாத துயரமாகப் பார்க்கப்படுகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின்இயக்குநராக இருந்த ஜோ கென்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

 ஈரானுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற போரை தாம் ஆதரிக்க முடியாது என்பதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்தப் போர் எதனால் ஆரம்பிக்கப்பட்டது,யாருக்காக நடைபெறுகின்றது, இந்தப் போர் வேண்டாம் என்பது தான் அவரது நிலைப்பாடாக இருக்கின்றது. இஸ்ரேலின் அழுத்தத்தினால் மட்டுமே ட்ரம்ப் இந்த போரை முன்னெடுப்பதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து விலகுவது ஏன் என்பது தொடர்பான விரிவான விடயங்களை கழுகுப்பார்வை நிகழ்ச்சியில் காணலாம்.