எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டணமும் உயரும்? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டணமும் உயரும்?




பேருந்து கட்டண உயர்வு அவசியம் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தனது சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று கூடி கட்டண உயர்வு குறித்து முடிவெடுப்பார்கள் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இதற்கிடையில், எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் செய்யப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிரெண்டா தெரிவித்துள்ளார்.