மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றுடன் (06) ஒப்பிடுகையில் 9% ஆல் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதன் பெறுமதி 93 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணெய் விலை இவ்வளவு உயர்வடைந்தது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் - நவம்பர் காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை இவ்வாறு உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகப்பு / உடன் செய்தி /
உலகச் செய்திகள் /
தலைப்புச்செய்திகள்
/ மத்திய கிழக்கு பதற்றம்: எண்ணெய் விலை 9% உயர்வு
