குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் இருதயம் வெடித்த சோகம்... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் இருதயம் வெடித்த சோகம்...

திருமணம் முடிந்து நீண்ட காலத்திற்கு பின்னர் குழந்தையை பெற்றெடுத்த பெண் ஒருவர் சந்தோசத்தை தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.
தம்புத்தேகம தெல்ஹிரிய என்னும் இடத்தைச் சேர்ந்த 31 வயதான தினுசிகா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் தம்புத்தேகம வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனையில் குறித்த பெண் இருதயம் வெடித்து உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குழந்தை ஈன்றெடுத்த போது தாய் ஆரோக்கியமாக இருந்தார் என தம்புத்தேகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

About UK TAMIL NEWS