மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் உயிரிழப்பு! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த குறியீட்டு கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த 18 வயதுடைய வி.ராஜ்கமார் என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் பளை, தர்மக்கேணி பகுதியில் உள்ள வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த குறியீட்டு கம்பத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About UK TAMIL NEWS