இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது

ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பருத்தித்துறை வட பகுதி கடலிருந்து 15 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரினால் யாழ் மாவட்ட நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About UK TAMIL NEWS