இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா இராமேஸ்வரத்தில் சிக்கியது

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் மதிப்பு 30 லட்சம் ரூபா (இந்திய நாணய மதிப்பு) என்று தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.