2026ஆம் ஆண்டுக்கான 6ஆம் வகுப்பு பாடத்திட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயற்படுத்தக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பெற்றோர்கள் மட்டுமன்றி மாணவர்களும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கில பாடத்திட்டத்தைத் தவிர்த்து, ஏனைய பாடங்களுடன் தொடர்புடைய தொகுதிகளை மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
