பட்டதாரிகளுடன் தீடீர் சந்திப்பு!!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிளுக்கான அவசர கலந்துரையாடல் நாளை  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வை.எம்.சி. மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பட்டதாரிகள் அனைவரினதும் வேலைவாய்ப்பு தொடர்பாகவும், இம்மாதம் இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளன.