பண்ணை வீட்டை வாங்குவதற்கு வசதியாக ஷாருக்கான் சம்பந்தப்பட்டவர்களுக்கு 8.4 கோடி கடனாக வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலம் விவசாய நிலமாகும். மகாராஷ்டிராவில், சட்டப்படி விவசாய நிலத்தை விவசாயி ஒருவருக்குத்தான் விற்க வேண்டும். இந்த நிலத்தை விவசாய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயி அல்லாத ஒருவருக்கு விற்க வேண்டும் எனில் கலெக்டர் அல்லது மாநில அரசின் ஒப்புதல் பெற்ற அதிகாரியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதியை பெறாமலேயே ஷாருக்கான் இந்த நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் அதில் ஒரு பங்களாவை அவர் கட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீடு பறிமுதல்
பண்ணை வீட்டை வாங்குவதற்கு வசதியாக ஷாருக்கான் சம்பந்தப்பட்டவர்களுக்கு 8.4 கோடி கடனாக வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலம் விவசாய நிலமாகும். மகாராஷ்டிராவில், சட்டப்படி விவசாய நிலத்தை விவசாயி ஒருவருக்குத்தான் விற்க வேண்டும். இந்த நிலத்தை விவசாய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயி அல்லாத ஒருவருக்கு விற்க வேண்டும் எனில் கலெக்டர் அல்லது மாநில அரசின் ஒப்புதல் பெற்ற அதிகாரியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதியை பெறாமலேயே ஷாருக்கான் இந்த நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் அதில் ஒரு பங்களாவை அவர் கட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.