மட்டக்களப்பில் பதற்றம்!! விசேட அதிரடிப்படையினர் சரமாரி துப்பாக்கிச் சூடு...

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே இருவர் உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.