விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்கள் இருவர் விடுவிப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்கள் இருவர் விடுவிப்பு

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்களான சுப்ரமணியம் நகுலன் உள்ளிட்ட 2 பேர் சட்டமா அதிபரின் ஆலோசணையின் பேரில் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் இலட்சிணையுடன்கூடிய தொப்பியை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

About UK TAMIL NEWS