மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய வைத்தியர்!! கொலையா தற்கொலையா? பொலிஸ் விசாரணை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய வைத்தியர்!! கொலையா தற்கொலையா? பொலிஸ் விசாரணை

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலையோடு இணைந்ததான இல்லத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடையில் மேசன் வேலைக்கு வந்தவர்கள் சீமெந்து எடுக்க சென்றபோது குறித்த வைத்தியர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
எம்.எச்.ஏ.றஷாக் எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், ஏற்கனவே பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது கொலைச் சம்பவமாகவும் இருக்கலாம் என்ற சந்தேக நிலை காணாப்படுவதால், இது தொடர்பாக வாழைச்சேனைப் பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

About UK TAMIL NEWS