எனக்கு தமிழக சிறை வேண்டாம்: சசிகலா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எனக்கு தமிழக சிறை வேண்டாம்: சசிகலா

தமிழக சிறை தனக்கு வேண்டாம் என சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கூறியுள்ளார்.
“உங்களை தமிழக சிறைக்கு மாற்றலாமா?’ என சசிகலாவிடம் தமிழக அரசு மூலம் கேட்கப்பட்டது. “தமிழக சிறைக்கு மாற்றினால் நிறைய புகார் வரும். எனவே இப்போது வேண்டாம்” என மறுத்து விட்டாராம்.
“சிறை மாற்றம் வேண்டாம். நான் மொத்தமாக விடுதலையாகி வெளியே வர வேண்டும். அதற்கான வேலையைப் பாருங்கள்” என டி.டி.வி. தினகரனிடமும் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்திடமும் பொறுப்பை ஒப்படைத்துள்ளாராம்.

About UK TAMIL NEWS